Sunday, January 15, 2012

நடக்க முடியாத நதிகள் !!!!

பெண்கள்  - நதிகள் தாம்
ஓரிடத்தில் பிறந்து
செல்வமென வளர்ந்து
மற்றோரிடத்தில் வாழ்ந்து
தாம் செல்லுமிடமெல்லாம்
அன்பு  கொழிக்கச் செய்து
பழகிய பாதையதில்
சலனம் சிறிதுமின்றி
சென்று கொண்டே இருக்கும்
அற்புத கங்கைகள் !!!
தன் சுகமதை மறந்து
பிறன் நலம் பேணி
பலன் எதிர்பாராது
அயராது பாடுபட்ட
போதும் - அநீதி அமிலங்கள்
அமைதியான  நதியதனில்
கலந்த நொடிதனில்
நடக்க முடியா நதிகளாய் !!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...