Friday, January 6, 2012

தொலைந்து போன மனிதநேயம்

தொலைந்து தான் போயிற்று-
மனித நேயம் !!!
எங்கு சென்று தேடுவது??
எவரிடம் புகாரளிப்பது??
தியாகத்தின் சின்னமாய்
அன்னை தெரசாவை
நேயத்தின் உருவாய்
கைவிளக்கேந்திய காரிகையாய்
வலம் வந்த ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலை
எங்கு சென்று தேடுவது -
இன்றைய சுயநலவாத உலகிலே??
தன் மக்களுக்காக
அரையாடை உடுத்தி
தன் சுகமதை மறந்து
தன்னையே வருத்திக்
கொண்டு - அவர்கள்
சிரிப்பில் தானும்
மகிழ்ந்த - ஏழைப் பங்காளனாம்
காந்தியை எங்கு தேடுவது??
பட்டறிவினால் மேதையாகி
தம் மக்களுக்கு கல்விக் கண்
திறந்த கர்ம வீரராம்
காமராஜரை எங்கு தேடுவது??
உள்ளமதில் தியாக எண்ணம்
உதவும் மனப்பான்மை
மேலோங்கினால் -
ஆகலாமே ஒவ்வோர் உள்ளமும்
அன்னை தெரசாவாக !!!
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலாக!!
மனித நேய மகாத்மாக்களாக!!! 

http://eluthu.com/kavithai/52774.html

 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...