Wednesday, February 27, 2013

காதலர் தினம்

ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!




நட்பென்ற போர்வையில்
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???




காதலும் காதலிக்கப்படும் பெண்களும்
கைப்பாவை பொம்மைகளா என்ன ??
வேண்டும் வரை காதலித்து விட்டு
அலுத்ததும் -
அலட்சியப் படுத்தவும்
அழித்து விடவும் ....



விரும்பும் இதயம்
என்றென்றும் நலமாய்
வளமாய் வாழ்ந்திட
விரும்புவதே காதல் !!
காதலித்த இதயம்
தனக்கு கிடைக்காவிடில்
அதையே பிளந்தெடுத்து
கையில் ஏந்தி மகிழ்வது
காதலல்ல - குரோதம் !!!!

http://www.tamilthottam.in/t36341-topic#219883

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...