Saturday, April 27, 2013

வெற்றி மாலைகள் உனக்காய் !!!






கவிதைக்கான கரு :

வேலை கிடைக்காத இளம் பட்டதாரி அவன். வீட்டின் சுமைகளை ஏற்க வேண்டிய கடமை கண் முன் தெரிந்தும் இன்னும் வேலை கிடைக்காததால் கவலை அடைந்து சோர்ந்து உட்காந்துவிடும் மனம் அவனுக்கு.
தினம் வீ்ட்டில் சாப்பிடும் போது வேலை செய்யாமல் சாப்பிடுவது அவனை எதுவோ செய்யும்.
இவன் மனதை அறிந்த அவன் அப்பா அன்று அவனை தனிமையில் அழைத்து ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்டுவது கவிதையின் கரு.



கனவுகளும் உன்னுள்
பூத்துக் குலுங்குது -
காலமும் தான்
அவை நினைவுகளாக
உன்னை வெற்றித் திருமகனாக்க
காத்துக் கிடக்குது !!!

கை பிடித்து
நடை பழக்கிய
தந்தை நானிருக்கிறேன் -
நீ துவண்டு விழும் வேளையில்
நம்பிக்"கை" கொடுத்து
உன்னை தூக்கி நிறுத்த !!!

வேலை இல்லையென்று
துவண்டு நீயும் முடங்கிடாதே
செய்யும் வேலைதனில்
உயர்வு தாழ்வு பாராட்டாதே -
நியாயமாய் செய்யும்
தொழிலனைத்தும் உயர்தொழிலே !!!

உழைப்பை மூலதனமாக்கி
வாழ்வை நீயும் எதிர்கொண்டால்
வானவில்லும் உனக்கு - வண்ண
மாலையாகக் காத்திருக்கு !!
துணிந்து நில் !! சவால்களை எதிர்கொள் !!
வெற்றி மாலைகள் உனக்காய் காத்துக்கிடக்கு !!!

http://tamilnanbargal.com/node/49422

2 comments :

  1. வெற்றி மாலைக்கான வழியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி!!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...