Wednesday, April 17, 2013

கிள்ளையே !!!




உன் சிப்பி வாயினுள்
முத்துப் பரல்களென
வெண்பற்கள் உன்
அழகுச் சிரிப்பிற்கு
அழகூட்டுகின்றனவே !!!
அமுத சுரபியென
உன் செவ்வாய் -
உமிழ்நீருடன் சேர்த்துதிர்க்கும்
அமுதச் சொற்களுக்கு
உருவாக்கிடலாம் -
ஓர் பேரகராதி !!!
நிற்கவும் நடக்கவும்
எத்தனித்து நீ
வைக்கும் ஒவ்வோர்
அடியின் அசைவிற்கும்
இணையானதோர்
எழில் நடனம்
உலகெங்கிலும் இல்லை !!!
வட்டிலில் இட்ட
உணவதனில் நீ
வரையும் கோலம் போன்றதொரு
எழிலோவியம் வரைய
ஓவியரெவரும் பிறக்கவில்லை !!!
சிறு கிள்ளை உன்
அசைவு ஒவ்வொன்றும்
தவமிருந்து காத்திருந்த
அன்னை  மனதை
கொள்ளை கொண்டிடுமே  !!!
அவளெடுத்த பிறவியின்
பயனும் தான் இனிதே
நிறைவேறுமே ! இன்பங்கள்
அனைத்தும் தேடி அடைந்திடுமே
அவள் காலடியில் தஞ்சம் !!!

6 comments :

  1. Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  2. அழகிய வரிகள். அருமையான படமும்.
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...