Monday, December 14, 2015

மனித நேயம்




கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாயிருந்தும் ஊமையராய்
இதயத்திற்கும் பூட்டிட்டு
சாவியைத் தொலைத்து விட்டவராய்
ஊரெங்கும் தேடி அலைகிறார்
மாந்தர் - மனித நேயம் தனை !
கண்களில் கருணையும்
வார்த்தைகளில் கனிவும்
இதழ்களில் புன்னகையும்
துடிக்கும் இதயம் தனில்
தன்னலம் மறந்த கருணையும்
தனக்கென வருகையில்
கையேந்தலை விடுத்து
இயன்ற தருணமெலாம்
கைகொடுத்து வாழ்ந்தால்
நிலைத்திருக்கும் அகிலமெலாம்
மனித நேயம் !

 தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர்  14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.

http://www.dinamani.com/kavithaimani/

7 comments :

  1. //தினமணி கவிதைமணி பகுதியில் டிசம்பர் 14ம் தேதியிட்ட செய்திப்பதிவில் வெளியான எனது கவிதை.//

    மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

    //இயன்ற தருணமெலாம் கைகொடுத்து வாழ்ந்தால் நிலைத்திருக்கும் அகிலமெலாம் மனித நேயம் !//

    அருமையோ அருமை.:)

    ReplyDelete
  2. //இயன்ற தருணமெல்லாம்
    கைகொடுத்து வாழ்ந்தால்// மிக அருமை தோழி
    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமை. தினமணியில் வெளியானதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல சகோதரரே !

      Delete
  4. அருமை! சகோ! தினமணியில் வெளியானதற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

    /இயன்ற தருணமெலாம் கைகொடுத்து வாழ்ந்தால் நிலைத்திருக்கும் அகிலமெலாம் மனித நேயம் !// ஆம்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...