Tuesday, March 8, 2016

மகளிர் விதைத்திடும் மாண்பு



பெண்ணென பூமிதனில்
பிறவியெடுத்திட்ட உயிர்களனைத்தும்
உளந்தனில் இயல்பாகவே
கொண்டுவிட்ட உன்னத குணம் -
விட்டுக் கொடுக்கும் தன்மை !
அன்னை தந்தையர்க்கு எந்நாளும்
மகளென்பவள் இளவரசியே !
அண்ணன் தம்பி அக்கா தங்கையென
உடன்பிறப்புகட்காய் தொடங்கும்
விட்டுக் கொடுக்கும் மாண்பு -
தொடர்கிறது அவளது வாழ்நாளெலாம் !
கல்வி கேள்வி கலை இலக்கியம் என
எதில் உயர்ந்திருந்தாலும் - தன்னிலை தாழ்த்தி
விட்டுக் கொடுத்து விலகிச் செல்ல
கற்றுத் தரப்படும் - நிர்பந்திக்கப்படும் பெண்
வாழ்நாளெலாம் விட்டுக் கொடுக்கிறாள் -
தன் உறவுகள் தன்னுள் உதித்த பிள்ளைகள்
நண்பர்கள் சுற்றம் என் அனைவருக்குமாய் !
மகளிருள் இயல்பாய் விதைந்திருக்கும் இம்மாண்பு
உலகெலாம் விதைக்கப்பட்டால் -
உயிர்பெறும் உயர் கருத்து
விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை !
உலகும் உன்னத இடமாகும்
வஞ்சம் பொறாமை பகையனைத்தும் மறைந்து
அன்பில் நிலைத்து மகிழ்ந்திருக்கும் !

6 comments :

  1. அருமை தோழி! மகளிர் தின வாழ்த்துக்கள் தமிழ்முகில் :)

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  2. அருமை....

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. Replies
    1. மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...