Saturday, May 7, 2016

யாதுமாகி நின்றாள் !

விரல் ஸ்பரிசம் தாளமாக
இதயத் துடிப்பும் இராகமாக
நாதமாய்  வாழ்வெனும்
அத்தியாயத்தின் ஆரம்பமாய் - தாய் !

முறைத்துக் கொண்டு நின்றாலும்
சற்று நேரத்திற்கெல்லாம்
மறந்து விட்டு - உடன் பிறப்புக்காய்
வாதாடி நிற்கும் - சகோதரி !

உதிரத்தால் உறவன்றி - கள்ளமிலா
பாசத்தால் பிறந்திட்ட உறவாய்
இதயமதில் எந்நாளும் தனியிடம்
கொண்டுவிட்ட உறவாய் - தோழி !

கொண்டவனின் வாழ்வு தனில்
உயர்வுதனை கொண்டாடுகிறாரொ இல்லையோ
தாழ்வு தனில் நம்பிக்"கை" எனும் தூண்டுகோலாய்
நிமிரச் செய்யும் மனைவி !

 ஒற்றைப் புன்னகையும் இதழ் வார்த்தையும்
இதயம் தனை கொள்ளை அடித்திட -
கொள்ளை போனதை மீட்டுக்கொள்ள
எண்ணம் வருவதே இல்லை - கொள்ளையடித்தவள்
மகளன்றோ !

மனித வாழ்வுதனில்
ஜனனம் துவங்கி மரணம் வரை
துணையாய் துணிவாய்
யாதுமாகி நிற்கின்றாள் - பெண் !


குறிப்பு :

ப்ரதிலிபி நடத்திய யாதுமாகி நின்றாள் - மகளிர் தின சிறப்பு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை.

2 comments :

  1. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...