Wednesday, September 28, 2016

சிறகை விரித்திடு !






சிறகை விரித்திடு

சித்திரப் பெண்ணே !
உலகிற்கே பொதுவான
வானம் - அது உன்னையும்
ஏந்திக் கொள்ள
எந்நாளும் தயாரே !
அடிமைத் தளைகளை
உடைத்தெறிந்து
உன்னதமாய் உலகை
வலம் வா !
அடக்கமும் அமைதியும்
உன்னுள் இருக்கட்டும் !
வீரமும் விவேகமும்
விழிப்புடனே இருக்கட்டும் !
அச்சமும் நாணமும்
கொண்டிருந்த காலம்
மலையேறட்டும் !
தைரியமும் தெளிவும்
எப்போதும் உனக்கு
துணையாகட்டும் !
ரவுத்திரம் பழகு !
வேதனை சோதனை என
அனைத்தும் உன்
சாதனைக்கு அடித்தளமாகட்டும் !
துணிந்து முன்னேறு -
உலகமே காத்திருக்கிறது
உனக்காய் !


1 comment :

Related Posts Plugin for WordPress, Blogger...