Wednesday, September 28, 2016

உடல் தந்தாய் உயிர் தந்தே



ஊண் உறக்கம் ஓய்வெல்லாம்
நேரம் கிடைக்கையில் தானுமக்கு
இருக்கும் நேரமெல்லாம் பிள்ளைகட்காய்
உழைப்பதிலேயே கடந்தது !
உடல் நோக நீங்கள் உழைப்பதினால்
மகிழ்வு  மட்டும்  சூழ்ந்த நந்தவனமானது
எம் வாழ்வு ! கால் கடுக்க நடந்ததுமில்லை
புத்தகச் சுமை சுமந்து பழகவுமில்லை !
உங்கள் அனுபவங்கள் எல்லாம்
எம் உள்ளந்தனில் பாடமாய் பதிய
நினைவை விட்டகலாது வாழ்க்கை நெறிகள் !
உழைத்து உழைத்து உருமாறியும்
ஓடாய் தேய்ந்தும் போனது - உங்கள் உடல் !
வாழ்வெனும் அருங்காட்சியகத்துள்
உறுதியான பொலிவான சிலைகளாய்
உங்கள் சந்ததியினர் ஜொலிக்க !
ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு மதிப்பு
அதை உணர்ந்து நடந்து கொண்டால்
உலகில் உயரும் உனக்கான
அன்புநிறை மனங்களின் ஆதரவு !
உயர் வாழ்க்கைப் பாடம் கற்பித்து -உணர்வுநிறை
 ஆன்மாவாய் எம்மை உலவ விட்டீரே
எனதன்புத் தந்தையே !



4 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...